தி.மு.க-வும் 38 எம்.பி-க்களை வைத்துக் கொண்டு எந்த திட்டங்களையும் கேட்டு பெறவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றால், தமிழ்நாட்டின் உரிமைக்காக அ.தி.மு.க குரல் கொடுக்கும் என்பதைதான் எடப்பாடி சுருக்கமாக பேசி இருக்கிறார்.” என்றார் சூடாக.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் பேசினோம்.
” பா.ஜ.க-வுடன் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணி இருந்த அ.தி.மு.க-வுக்கு திடீரென ஞானோதயம் ஏற்பட்டு, இப்போது கூட்டணியை முறித்துவிட்டதாக அறிவித்து இருக்கிறார்கள். தற்போது தேசிய கட்சிகள் தமிழ்நாட்டை துரும்பாக நினைக்கிறார்கள் என்று சொல்கிறார் எடப்பாடி.

அவரின் கருத்தில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ‘ நாங்கள் ஒரு மாநில கட்சி. இனி தேசிய கட்சியிடம் எந்த காலமும் கூட்டணி வைக்கமாட்டோம்’ என்று எடப்பாடியால் சொல்லமுடியாமா? அவ்வளவு ஏன் தேசிய கட்சி என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறாரே தவிர, பா.ஜ.க., காங்கிரஸ் என்று பெயரைக்கூட சொல்ல தயக்கம் காட்டுகிறாரே. கூட்டணியில் இருந்து விலகிவிட்டாலும், பா.ஜ.க-வின் நிர்வாகம் மற்றும் கோட்பாடுகளை எடப்பாடி விமர்சிக்கவில்லை. அவர்களின் விமர்சனமெல்லாம் அண்ணாமலையுடன் சுருங்கிவிடுகிறது. கோட்பாடற்ற அரசியல் லாப கணக்குகள் அடிப்படையில்தான் எடப்பாடி பேசுகிறார். மற்றப்படி தமிழ்நாடு மீதும் மக்கள்மீதும் உளமாற அக்கறை கிடையாது. ” என்றார் காட்டமாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
