
வங்கக்கடல் பகுதியில் கடந்த 3 ஆம் தேதி உருவான மிக்ஜம் புயலானது சென்னையை ஒரு புரட்டு புரட்டி போட்டப்பின் ஆந்திர பகுதியில் கரையை கடந்தது. இதனால் சென்னை முழுவதிலும் வெள்ளக்காடாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்றளவிலும் சென்னையில் உள்ள ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் மழை ஓய்ந்தாலும், வட மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் அவ்வபோது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரை, நீலகிரி மாவட்டத்தில் தலா 6 செ.மீ மழையும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 17 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
ALSO READ : அதிகாலையில் திடீரென உடைந்த ஏரி… அலறி அடித்து வெளியேறிய மக்கள்..!
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்ப நிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும் குறைந்தபட்சம் 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகும். இதுவரை பெய்த வடகிழக்கு பருவமழையை கணக்கிடுகையில் மொத்தம் 38 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in