
கடந்த வாரம் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால் மழைநீர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. மழை ஓய்ந்து மூன்று நாட்களுக்கு மேலாகியும் சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் மட்டுமே தண்ணீர் வடிந்துள்ளது. இன்னும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் உள்ளதால் மக்கள் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மிக்ஜம் புயலின் தாக்கத்திலிருந்தே மக்கள் வெளிவர முடியாமல் இருக்கும் இந்த சூழ்நிலையில், இவர்களுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
ALSO READ : தமிழகத்தில் முட்டை விலை திடீர் உயர்வு..! சற்றுமுன் கிடைத்த புதிய தகவல்!!
மேலும், தமிழகத்தை பொறுத்தவரை நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணாப்படும், நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in