15 முதல் 18 வயதுக்குட்பட்ட ஆணுக்கும் அவரின் மனைவிக்கும் இடையே கட்டாய உடலுறவு இருப்பின் அது பாலியல் வன்கொடுமைக்குச் சமமாகக் கருதப்படும்.
இந்த வழக்கில் ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ சான்றுகளும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் இல்லை.
அதுமட்டுமல்லாமல் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 விதியைப் போல பாரதிய நியாய சன்ஹிதாவில் (Bharatiya Nyaya Sanhita Bill, 2023) இது போன்ற எந்த விதியும் சேர்க்கப்படவில்லை’’ என்று கூறி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-ன் கீழ் குற்றவாளி அல்ல என்று கூறியுள்ளது.
இந்தப் பிரிவின் கீழ் விடுவிக்கப்பட்டாலும் வரதட்சணை மற்றும் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல் போன்ற இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 498A மற்றும் 323-ன் கீழ் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.
லோக் சபாவில் முன்மொழியப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா மசோதா இயற்றப்பட்டால் தற்போதுள்ள இந்திய தண்டனை சட்டம் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மனைவி 18 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பின் மனைவியின் விருப்பத்துக்கு எதிரான கட்டாய உறவு (Marital rape) குற்றமாகக் கருதப்படாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து உங்களின் கருத்தென்ன?… கமென்டில் சொல்லுங்கள்!
நன்றி
Publisher: www.vikatan.com
