சிங்கப்பூரில் இது வரை சீனாவை சேர்ந்தவர்களே அதிக அளவில் அதிபர்களாக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதற்கு முன்பு சிங்கப்பூரில் நிதியமைச்சர் உட்பட பல்வேறு துறை அமைச்சராக தர்மன் சண்முகரத்தினம் இருந்துள்ளார். தேர்தல் வெற்றிக்கு பிறகு அவர் அளித்த பேட்டியில், “சிங்கப்பூர் மக்கள் தனக்கு அளித்துள்ள ஆதரவுக்கு உண்மையிலேயே மதிப்பளித்து அதனை காப்பாற்றுவேன்.


எனக்கு அளிக்கப்பட்ட வாக்கு சிங்கப்பூருக்கு அளிக்கப்பட்ட வாக்காகும்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு சிங்கப்பூரில் செல்லப்பன் ராமநாதன் மற்றும் தேவன் நாயர் ஆகியோர் தமிழர் வம்சாவளி அதிபர்களாக இருந்துள்ளனர். இலங்கைத்தமிழரான தர்மன் சண்முகரத்தினம் லண்டனில் பொருளாதாரம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com