மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லாமல் மொத்தமாக அனைவரையும் கலங்கடித்துவிட்டாலும், அதன் பிறகான மீட்பு நடவடிக்கைகள், நிவாரண உதவி அளித்தல் போன்ற அரசின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களையும் சென்றடைகிறதா என்ற கேள்வி பொதுவாக நிலவுகிறது. காரணம், கனமழை பெய்து ஓய்ந்த அடுத்தநாளே சென்னையின் பிரதான இடங்களில், சாலைகளில் வடிந்த நீர், வடசென்னை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உட்பட பல இடங்களில் இன்னும் வடிந்தபாடில்லை.
`அரசு அதிகாரிகளும் எட்டிப்பார்க்கவில்லை, அரசின் நிவாரண உதவிகளும் இன்னும் வரவில்லை” என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். இந்தச் சூழலில், எண்ணூர்ப் பகுதியிலிருக்கும் எண்ணெய் நிறுவனங்கள், இந்த மழைவெள்ள சூழலைப் பயன்படுத்தி, கொசஸ்தலை ஆற்றில் (கொற்றலை ஆறு) எண்ணெய்க் கழிவுகளைக் கலப்பதாக வந்த தகவலையறிந்த விகடன் செய்தியாளர்கள், கள நிலவரத்தை அறிய எண்ணூர்ப் பகுதிக்குச் சென்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com