அதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் மூவரில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாகப் பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவரை இடம்பெறச் செய்யும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நேற்று நடைபெற்றக் கூட்டத்தில், ராஜ்ய சபாவில் இந்த மசோதா விவாதத்துக்கு வந்தது.

நியாயமான தேர்தல்கள், வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியலைப் பராமரிப்பதைவிடவும், தேர்தல் ஆணையரின் பணி பெரியது. அரசியல் கட்சிகளில் இருக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குமான பொறுப்பும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவான 2:1 மசோதா நியாயமற்றது. மேலும், ஜனநாயகம், அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு எதிரானது” என்று பதிவிட்டிருந்தார்.
இருப்பினும், நேற்று ராஜ்ய சபாவில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள், பதவிக்காலம்) மசோதா, 2023 நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com
