சபரிமலையில் எல்லா வருடமும் நெரிசல் ஏற்படுவது சாதாரணம் தான். அதைக் கட்டுப்படுத்த அரசு போதிய முன் ஏற்பாடுகளைச் சரியாகச் செய்துள்ளது. சபரிமலையிலுள்ள பிரச்னைகளைப் பற்றி இதுவரை இரண்டு முறை அறநிலையதுறை அமைச்சர் உட்பட அனைத்து அதிகாரிகளுடனும் நான் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளேன். இந்த கூட்டங்களின் அடிப்படையில் பக்தர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க போதிய வசதிகளை அரசு செய்துள்ளது. சபரிமலையில் சிறிய பிரச்னைகள் ஏற்பட்டால் கூட அதை ஊதி பெரிதாக்கி எதிர்க்கட்சியினர் அரசியல் செய்துவருகின்றனர். எதிர்க்கட்சியினரின் இந்த செயல்கள் பக்தர்களிடையே தேவையில்லாத பீதியைக் கிளப்புகிறது.
கடந்த நாள்களில் சபரிமலை கூட்ட நெரிசலில் 12 வயது சிறுமி இறந்தது துரதிருஷ்டவசமானது, அதில் நம் அனைவருக்கும் வருத்தம் உண்டு. மருத்துவ பரிசோதனையில் சிறிய வயது முதலே அந்த சிறுமிக்கு இருதய பிரச்னைகள் இருந்ததாகவும் அது தான் இறப்பிற்குக் காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்குக் கூட அரசு தான் காரணம் எனப் பழி கூறுவது மிகவும் தவறானது. நவ கேரளா சதஸ் பொதுக்கூட்டங்கள் வெற்றியடைவது எதிர்கட்சியினருக்கு பிடிக்கவில்லை அதனால் தான் பொய்களை அவர்கள் பரப்புகிறார்கள்” என தனது உரையில் கூறினார்.
பீருமேடு தொகுதியின் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு கோட்டயம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளின் கூட்டங்களுக்காக, பிரத்யேகமாகத் தயார் செய்திருந்த பேருந்தில் முதலமைச்சரும் அமைச்சர்களும் சென்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com