இப்படியான சூழலில், இந்தக் கூட்டத்துக்கு எதிரான தனி மனிதரின் போராட்டம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதாவது, கொல்லம் மாவட்டம், தலவூரில் ரஞ்சித் என்பவர் உடம்பு முழுக்க வெள்ளை நிறம் பூசி முற்றிலும் வித்தியாசமான ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளார். முன்னதாக, நவ கேரளா சதஸ் கூட்டங்களில் பங்கெடுக்க நேற்று கொல்லம் மாவட்டம் வந்திருந்தார் முதல்வர். அப்போது, பத்தனாபுரம் பகுதியில் முதல்வர் கடந்துசெல்லும் சாலையோரம், வித்தியாசமாகத் தலை முதல் கால் வரை வெள்ளை நிறத்தைப் பூசி ரஞ்சித் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இதுகுறித்து ரஞ்சித், “கறுப்பு நிறமுடைய எதைப் பார்த்தாலும் முதல்வருக்குப் பிடிக்காது. பொதுக் கூட்டங்களில் கறுப்பு சட்டை அணிந்து சென்றாலோ, கறுப்பு முகக்கவசம் அணிந்து சென்றால்கூட கைது செய்கின்றனர். எனவே, பிறவியிலேயே கறுப்பு நிறமுடைய என்னைப் பார்த்தாலும் போலீஸார் கைது செய்துவிடுவார்கள். அதனால்தான் தலை முதல் கால் வரை உடம்பு முழுவதும் வெள்ளை நிறம் பூசி வந்திருக்கிறேன். எனது சட்டை, வேட்டி, கைப்பேசி, ஏன் உள்ளாடைகூட வெள்ளை நிறத்தில்தான் அணிந்து வந்துள்ளேன். என் கண் மட்டும் தான் கறுப்பு, அதைக்கூட முதல்வர் வரும்போது மூடிவிடுகின்றேன்” என்று நகைப்பாகக் கூறினார்.
நன்றி
Publisher: www.vikatan.com