`திருமணமான மகன் இறந்துவிட்டால், தாய் சொத்தில் பங்கு கேட்க

சொத்து ஒதுக்கீடுசொத்து ஒதுக்கீடு

சொத்து ஒதுக்கீடு
சித்திரிப்புப் படம்

வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பி.எஸ்.மித்ரா நேஷா, “வாரிசுரிமைச் சட்டம் 42-வது பிரிவின்படி, கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உள்ளது. மனைவியோ குழந்தைகளோ இல்லை என்றால், தந்தை சொத்துகளுக்கு வாரிசுதாரராவார். தந்தையும் இல்லை என்றால், தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் வாரிசுதாரராவார்கள்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, “திருமணமான மகன் இறந்த நிலையில், சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை. மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உள்ளது. தாய் பங்கு கேட்க முடியாது” என்று தெரிவித்த நீதிபதிகள், `தாய்க்கு பங்கு உண்டு’ என்ற நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவிய வழக்கறிஞர் மித்ரா நேஷாவுக்கு, நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *