“மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால்… சாதி

ஆங்கிலேயர்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் காந்தி ஜெயந்தியின் போது தமிழ் நாடு அரசு புகைப்பட கண்காட்சி நடத்தினார்கள். அதில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு 18 முறை வந்ததை நினைவுபடுத்தும் வகையிலான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்படங்கள் இருந்தது.

அதில், திராவிட இயக்க கருத்தியலை கொண்ட ஒருவர் புகைப்படம் கூட இல்லை. அந்தப் புகைப்பட கண்காட்சியை இந்த முறை அவர்கள் நடத்தவில்லை. மகாத்மா காந்தி, பகத்சிங், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால், அவர்களையும் சாதி தலைவர்களாக மாற்றி இருப்பார்கள். “எந்நன்றி கொண்டாருக்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’ என நன்றி மறப்பது குறித்து திருவள்ளுவர் கூறி உள்ளார். இன்று தமிழ்நாட்டில் பிறந்து தம் வாழ்வை தியாகம் செய்தவர்கள் மறக்கடிக்கப்பட்டு விட்டார்கள். ராபர்ட் கால்டுவெல் தான் திராவிட கருத்தியலை உருவாக்கியவர். பிரிட்டிஷ் இந்தியாவை ஆள நினைத்த போது முதலில் மிஷினரிகளை அனுப்பினார்கள்.

கவர்னர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி கவர்னர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி

கவர்னர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி

அதில், பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட ராபர்ட் கால்டுவெல்லை இந்தியாவிற்கு அனுப்பினார்கள். அவர் தான் திராவிடம் என்று பிரித்துக் கூறினார். இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். தமிழகம் புண்ணிய பூமி. இங்கு ஏராளமான ரிஷிகளும், முனிகளும் வாழ்ந்துள்ளார்கள். .இந்தியாவிற்கு சுதந்திரம் தர கூடாது என தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் லண்டன் சென்று பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை வைத்தனர். சுதந்திர தினத்தை கருப்பு தினம் என அறிவித்தனர். அவர்களை தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள். சுதந்திர போராட்ட வீரர்களை கொண்டாடுவதில்லை. நமக்குள் இருந்த பிரிவினை இருந்ததால் தான் மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாட்டில் சுந்தந்திர போராட்ட வீரர்கள் குறித்து ஆராய்ச்சி மாணவர்கள் யாரும் ஆய்வு செய்வதில்லை. அது எனக்கு வருத்தமாக உள்ளது. வருங்கால தலைமுறையினர் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… 

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… 

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *