2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த இந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின் மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா 2019-ல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்தாலும், இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

இதை நடைமுறைப் படுத்துவதற்கான விதிகளை வகுப்பதில் சிக்கல் இருப்பதால், அதற்கான கால அவகாசத்தை நீட்டித்துக்கொண்டே வரும் பா.ஜ.க அரசு, தற்போது லோக் சபா தேர்தல் நெருங்க நெருங்க அந்தப் பணிகளில் வேகமெடுத்து வருகிறது. இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த மண்ணின் சட்டம் என்றும், இதை அமல்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்றும் அமித் ஷா மீண்டும் உறுதியாகக் கூறியிருக்கிறார்.

மேற்கு வாங்க மாநிலத்திலுள்ள தேசிய நூலகத்தில் நேற்று நடைபெற்ற, மாநில பா.ஜ.க-வின் சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினர்கள் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “வரும் லோக் சபா தேர்தலில் மாநிலத்திலுள்ள 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றும். அதோடு, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆட்சியமைக்க நாம் உழைக்க வேண்டும். ஊடுருவல், பசு கடத்தல் போன்றவற்றுக்கு பா.ஜ.க அரசு முடிவுகட்டி, மதரீதியாகத் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சி.ஏ.ஏ மூலம் குடியுரிமை வழங்கும். சி.ஏ.ஏ விவகாரத்தில் மக்களையும், அகதிகளையும் மம்தா பானர்ஜி தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த மண்ணின் சட்டம் என்பதையும், யாராலும் அதைத் தடுக்க முடியாது என்பதையும் நான் தெளிவாகக் கூறிவிடுகிறேன். அது எங்களின் பொறுப்பு” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
