அண்ணாமலையின் இந்த நடவடிக்கைகளால் `பொறுத்தது போதும் பொங்கி எழு!’ என்று கிளம்பிய அ.தி.மு.க தலைமை, கடந்த 25-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, `பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை!’ என்று தீர்மானம் நிறைவேற்றி `நன்றி, மீண்டும் வராதீர்கள்’ என எக்ஸ் தளத்தில் போஸ்ட்டும் போட்டுவிட்டது. இந்த முடிவை சற்றும் எதிர்பாராத பா.ஜ.க தலைவர்கள், வயிற்றில் புளியைக் கரைத்த கதையாக ஸ்தம்பித்துவிட்டனர்.

`நோ பாலிடிக்ஸ்; எல்லாம் தேசியத் தலைமை பேசிக்கும்!’ -(செப்டம்பர் 25, 2023)
இந்த நிலையில், கோவை கவுண்டம்பாளையத்தில் `என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை மேற்கொண்டிருந்த அண்ணாமலையிடம், அ.தி.மு.க கூட்டணி முறிவு பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “கோயம்புத்தூரில் `என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை சென்று கொண்டிருக்கிறது. அதிகமாக பேசுவதற்கு நமக்கு நேரம் இல்லை. ஒரே ஒரு கருத்து என்னவென்றால், அ.தி.மு.க-வின் அறிக்கையைப் படித்தோம். தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இது குறித்து எங்களுடைய தேசிய தலைமை பேசும். சரியான நேரத்தில் பேசும். நாங்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது ஃப்யூச்சரில் இதைப் பற்றி பேசுவோம்!” என நழுவினார். விடாமல் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க, “பாதயாத்தியின்போது நான் பாலிடிக்ஸ் பேசுவதில்லை! எல்லாவற்றுக்கும் ஒரு ப்ரோசிஜர் இருக்கிறது. தேசியத் தலைவர் இருக்கிறார். இது குறித்து தேசியத் தலைமை பேசும். பத்திரிகையாளர்களுக்கு நன்றி!” எனக் கூறிவிட்டு, நகர்ந்தார்.
ஒரு காலத்தில் `நான் இப்படித்தான், யார் பேச்சையும் கேட்கமாட்டேன், டெல்லிக்குச் சொன்னாலும் மாற்றிக்கொள்ள மாட்டேன்’ எனப் பேசிக்கொண்டிருந்தவர், `இனி எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்கொள்வான்’ என்ற ரீதியில் எஸ்கேப் ஆனதைக் குறிப்பிட்டு, நெட்டிஷன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
