மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 76 ஏக்கர் பரப்பளவிலான சட்டவிரோத கசகசா பண்ணைகள் அழிக்கப்பட்டிருப்பதாக, அந்த மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, மணிப்பூர் மாநிலக் காவல்துறை, வனத்துறை மற்றும் மணிப்பூர் ரைஃபிள்ஸ் ஆகியவற்றின் கூட்டுப் படை, கடந்த செவ்வாய்க்கிழமை 39 ஏக்கர் மற்றும் புதன்கிழமை 37 ஏக்கர் என மொத்தமாக 76 ஏக்கர் அளவிலான சட்டவிரோத கசகசா பயிர்களை அழித்திருக்கின்றன.
கடந்த இரண்டு நாள்களில் மாநில அதிகாரிகளால் அழிக்கப்பட்ட இந்தப் பண்ணைகளின் மொத்த பரப்பளவானது, 40 கால்பந்து மைதானங்களின் அளவுக்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது. மணிப்பூர் மலைப்பகுதிகளில் பெரிய அளவிலான சட்டவிரோத கசகசா சாகுபடிக்கு எதிராகத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com