தெலங்கானா தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு; ஒய்.எஸ்.ஷர்மிளா

தெலங்கானாவை பொறுத்தவரையில் காங்கிரஸ்- பி.ஆர்.எஸ் கட்சிகள் இடையேதான் போட்டி. பா.ஜ.க-பி.ஆர்.எஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய 3 கட்சிகளும் மறைமுகமாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சந்திர சேகர ராவ் பா.ஜ.க-வுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளிக்கிறார். ஜி.எஸ்.டி உட்பட பல்வேறு மசோதாக்களுக்கு பி.ஆர்.எஸ் ஆதரவு அளித்திருக்கிறது. சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகளுக்கு பயந்துதான் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்து வருகிறார், சந்திர சேகர ராவ். இவர்களுக்கு காங்கிரஸ்தான் முதல் எதிரி. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏ.ஐ.எம்.ஐ.எம் தேர்தலில் போட்டியிட்டது. இதனால் காங்கிரஸுக்கு நஷ்டம், பா.ஜ.க-வுக்கு லாபம். எனவே அந்தக் கட்சி மறைமுகமாக பா.ஜ.க-வுக்கு உதவி வருகிறது” என பிரசார பொதுக்கூட்டத்தில் வெடித்திருந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்திராகுல் காந்தி

ராகுல் காந்தி
Twitter

இதேபோல் சந்திர சேகர ராவ், “மத்திய பா.ஜ.க அரசு அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத் உட்பட பல மாநிலங்களில் தலித்துகள்மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். தலித் மக்களை சில அரசியல் கட்சிகள் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. என்ன நடத்தாலும் நாங்கள்தான் மீண்டும் தெலங்கானாவில் வெற்றி பெறுவோம். எங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நலத்திட்டங்களை ரத்து செய்துவிடுவார்கள்” எனக் கொதித்திருந்தார். இதற்கிடையில் சமீபத்தில் வெளியான தகவல்கள், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருப்பதால், பலரும் அந்த கட்சியில் இணைத்து வருகிறார்கள்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *