டெல்லியில் ஆம் ஆத்மி அரசால் கொண்டுவரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை, இந்த ஆண்டு பிப்ரவரியில் சிபிஐ கைதுசெய்து, திகார் சிறையில் காவலில் வைத்தது. அடுத்த இரண்டு நாள்களில் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், மார்ச் 9-ம் தேதி சிபிஐ-யின் எஃப்.ஐ.ஆரின்படி திகார் சிறையில் மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, பணமோசடி வழக்கிலும் அவரைக் கைதுசெய்தது.
அதன்பின்னர், ஜாமீன் கோரி மே மற்றும் ஜூலையில் மணீஷ் சிசோடியா சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மணீஷ் சிசோடியா இன்றுவரை சிறையிலேயே இருக்கிறார். இந்த நிலையில், மணீஷ் சிசோடியா மீதான விசாரணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி ராஜு ஆஜரானார்.
நன்றி
Publisher: www.vikatan.com