சுரங்கத்தில் வெடிகுண்டுகள் வெடிப்பதற்கு முன் தினம் மாலை பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான சார்லஸ் ஹர்ரிங்க்டோன் என்பவர் ஊடகங்களுக்கு ஒரு தகவலைக் கூறினார். “அன்பர்களே, நாளைக்கு நாம் சரித்திரம் படைப்போமா என்பது தெரியாது. ஆனால் நிச்சயம் நிலவியலை மாற்றியமைப்போம்” என்றார். அதற்குமேல் தகவல் தெரிவிக்க மறுத்தார்.


சுரங்கம் வெட்டி தாக்குதல் என்பதற்கு உச்சக்கட்டமாக அமைந்தது மெஸைன்ஸ் போர் (Battle of Messines) என்று அறியப்பட்ட, 1917ல் புரியப்பட்ட இந்த யுத்தம். அதிர்ச்சியைப் பயன்படுத்தித் தாக்குதல் தொடுத்தது பிரிட்டிஷ் படைப் பிரிவுக்கு வெற்றி கிடைத்தது.
சுமார் பத்தாயிரம் ஜெர்மன் ராணுவ வீரர்கள் இதிலிருந்தனர். வெடிகுண்டுகளால் ஒரே சமயத்தில் உருவான மாபெரும் அழிவு இதுதான் என்கிறார்கள். (அணுகுண்டு சேதங்கள் வேறு வகை)
1917 போர்ச்சூழலில் அறிமுகமான மற்றொரு போர்த் தளவாடம் பீரங்கி வண்டி. உறுதியான உலோக மேற்கூடும் தனிவகைச் சக்கரங்களும் உடைய, பீரங்கிகள் பொருத்தப்பட்ட, பெரிய, கனரக ராணுவ ஊர்தி என்று இதை விவரிக்கலாம்.
நன்றி
Publisher: www.vikatan.com