Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
10 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. 48 லீக் ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 4 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இன்றைய போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்திய அணி மோதும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் கூட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அலைமோதுகிறது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷல் ஆகியோர் களம் இறங்கினர்.
இந்திய அணியின் சார்பில் முதல் ஓவரை முஹமது சிராஜ் வீசினா. 2-வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ். இந்த கேட்ச் மூலம் உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
உலகக்கோப்பையில் அவர் பிடித்திருக்கும் மொத்த கேட்ச் 15. அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் கும்பிளே 14 கேட்ச்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
The post உலகக்கோப்பை..!! மாஸ் காட்டிய விராட் கோலி..!! ஒற்றை கேட்ச்சால் புதிய சாதனை..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com