தமிழக அரசானது பெண்களுக்குக்காக நிறைய திட்டத்தை தொடங்கியிருக்கு.. இப்போலாம் பெண்கள் எல்லா துறைகளிலும் சாதிச்சிட்டு வராங்க.. முன்பு போல் இல்லாமல் தற்பொழுது எல்லாம் அனைத்து பெண்களும் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. ஆனால், அவர்களின் சூழ்நிலை அவர்களை முன்னேற விடாமல் தடுக்கிறது. இதனால்தான் தமிழக அரசு பெண்களின் கல்விக்காகவும் அவர்களின் எதிர்காலத்துக்காகவும் பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், தற்பொழுது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையும் தொடங்கி இருக்கு. இதன் மூலம் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் அரசே தருதாம். இந்த திட்டத்துனால பல பெண்களும் சந்தோஷ படுறதா சொல்லியிருக்காங்க.. மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் மாசம் தான் தொடங்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 1 கோடியே 6 லட்சம் பெண்களின் வங்கி கணக்குக்கு 1000 ரூபாய் செலுத்தினாங்க நம்ம தமிழக அரசு. அதன்பின், இந்த மாதமும் இவர்களுக்கு 1000 வழங்கப்பட்டது. இந்த அக்டோபர் மாசம் மட்டும் 1 கோடியே 6 லட்சத்து 48 ஆயிரத்து 406 ரூ.1000 வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Also Read : சற்றுமுன் TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..! தேர்வர்களே உங்களுக்குத்தான்…
இந்நிலையில், இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில நிறைய பேர் நிராகரிக்கப்பட்டனர். இவர்களாம் மீண்டும் மேல் முறையீடு செய்யலாமுன்னு தமிழக அரசு சொன்னது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் ஏராளமானோர் மேல்முறையீடு பண்ணாங்க. அதுல இந்த மாசம் புதுசா 5 ஆயிரத்து 41 பேர் சேர்த்துள்ளதாகவும், தகுதியற்ற 8 ஆயிரத்து 833 பேர் நீக்கப்பட்டுள்ளதாவும் தமிழக அரசு தெரிவிச்சிருக்கு.
நன்றி
Publisher: jobstamil.in