தெலங்கானா: 2,620 மதுக்கடைகள் ஏலம்… 100 கடைகளை ஏலம் எடுத்த

இந்த நிலையில், தற்போது முடிந்த ஏலத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் பெண்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மதுக்கடைகளை ஏலத்தில் எடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக, கலால் துறை வெளியிட்ட தரவுகளின்படி, மொத்தமாக 100 மதுக்கடைகளைப் பெண்கள் ஏலம் எடுத்திருக்கின்றனர். இவையனைத்தும், நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில், அதிகபட்சமாக சரோன்நகர் கலால் மாவட்டத்தில் 14, ஹைதராபாத் கலால் மாவட்டத்தில் 13 , செகந்திராபாத் கலால் மாவட்டத்தில் 8, ஷம்ஷாபாத் கலால் மாவட்டத்தில் 7 மதுக்கடைகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் தற்போது மொத்தமாக, ஒவ்வொரு கலால் மாவட்டத்திலும் சராசரியாகக் குறைந்தது இரண்டு மதுக்கடைகள் பெண்கள் வசம் இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் வெளியான தகவலில், முன்பை விடவும் அதிக அளவில் தற்போது பெண்கள் விண்ணப்பித்து மதுக்கடைகளை ஏலம் எடுத்திருக்கின்றனர் என்றும், அதில் சில விண்ணப்பங்கள் பெண்களின் பெயரில் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் விண்ணப்பித்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *