அதை உண்மை என நம்பி கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சதீஷ்குமார், ரவிச்சந்திரன், சதீஷ்குமாரின் மனைவி சங்கீதா ஆகியோரிடம் பணத்தைக் கொடுத்தோம். பணத்தை வாங்கிக் கொண்டபின்னர், அவர்கள் வேலையை நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தனர். ஆனால், பணி நிரந்தரம் செய்து தரவில்லை. நாங்கள் அடிக்கடி கேட்டு வந்ததால், எங்களை மிரட்டினர். மேலும் வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டனர். கடந்த மார்ச் மாதம் தலைவர் சதீஷ்குமாரின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவர் சங்கத்திலிருந்து வெளியே சென்றுவிட்டார். நாங்கள் பலமுறை அவர்களிடம் கேட்டும், `பணம் கிடையாது’ என மிரட்டல் விடுத்தனர். `இது பற்றி வெளியே சொன்னால், எங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என மிரட்டினர்.
மேலும், `தலைவர் சதீஷ்குமாரிடம்தான் பணத்தைக் கேட்க வேண்டும்’ என ரவிச்சந்திரன் மிரட்டினார். எனவே, அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தைப் பெற்றுத் தரவேண்டும். எங்களது குடும்பத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர். இதில், சத்தியஜோதி, சபிதா ஆகியோர் தலா 10 லட்சம் ரூபாயும், மகேஸ்வரி 8 லட்சம் ரூபாயும் கொடுத்து, ஏமாந்திருக்கின்றனர். இது குறித்து டவுன் உதவி ஆணையர் வெங்கடேசன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். சதீஷ்குமார் தற்போது சேலம் மாநகர எம்.ஜி.ஆர் மன்றத் துணைச் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com