`கணவருடனான பிரச்னை.. பெண்களால் `சட்ட பயங்கரவாதம்’


கணவரை விட்டுப் பிரிந்த ஒரு பெண், 2017-ம் ஆண்டு தன் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் சொல்வதுபோல் எதுவும் நடக்கவில்லை என்று கூறி, அவர் அளித்த புகார்களை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கணவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த திங்கள் அன்று இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுபேந்து சமந்தா, பெண்கள் சட்ட பயங்கரவாதத்தை கையிலெடுப்பதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதி, `2017-ம் ஆண்டு அக்டோபரில் அந்தப் பெண் தனக்கு எதிராக நடந்த மன மற்றும் உடல் ரீதியிலான கொடுமைகள் குறித்துக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும் அதே வருடம் டிசம்பரில் தன் கணவரை விட்டுப் பிரிந்த அந்தப் பெண், கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டையும் பதிவு செய்துள்ளார்.

ஆனால் கணவர் செய்த முதன்மையான குற்றத்தை நிரூபிக்க எந்த ஆதாரமும் பதிவு செய்யப்படவில்லை. குற்றச்சாட்டை அந்தப் பெண் வாய் வார்த்தைகளால் மட்டுமே கூறியுள்ளார். அதற்கான ஆவணச் சான்றோ, மருத்துவச் சான்றோ எதுவும் இல்லை.

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *