Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
மாமியார் மருமகளை கொடுமை செய்வதை பற்றி பலர் பேசுவது உண்டு. மாமியாரால் பல மருமகள்கள் வேதனையில் வாழ்வது உண்மை தான். ஆனால், மருமகளால் மாமியார் படும் வேதனையை பற்றி பலர் பேசுவது இல்லை. வயதான காலத்தில் எழுந்து நிற்க கூட தெம்பு இல்லாமல் மருமகளிடம் சித்ரவதை அனுபவிக்கும் மாமியார்கள் அநேகர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் மருமகளால் மாமியார் படும் வேதனை கல்நெஞ்சங்களையும் கரைய செய்துள்ளது.
ஆம், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் லக்ஷ்மம்மா. இவருக்கு இரண்டு மருமகள்கள். இவரின் மூத்த மருமகள் பத்மா. இவருக்கும் மாமியாருக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று மூத்த மருமகள், தனது மாமியாரை துடப்பத்தால் கடுமையாக தாக்கி உள்ளார். இதனை எதிர் வீட்டில் வசித்து வரும் நபர் வீடியோ எடுத்து லக்ஷ்மியம்மாவின் இளைய மகனுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post “என்ன விட்டுரு மா, வலி தாங்க முடியல” கதறிய மூதாட்டி; நெஞ்சை நொறுக்கும் வீடியோ.. appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com