Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
பாண்டி என்ற நபர், விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு 39 வயதான காளீஸ்வரி என்ற மனைவியும், 19 வயதான அருண்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரது மகன் நேற்று காலை பால் வாங்க வெளியே சென்றுள்ளார். பின்னர் பால் வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பிய போது, அவரது தாய் வீட்டில் இருந்த கிரைண்டரில் விழுந்து கிடந்துள்ளார். மேலும் கிரைண்டரின் சுவிட்ச் போடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அருண்குமார், உடனடியாக கிரைண்டர் சுவிட்ச்சை அணைத்துள்ளார். மேலும், தனது தாயாரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு காளீஸ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், கிரைண்டரில் இருந்து மின்சாரம் தாக்கி காளீஸ்வரி உயிர் இழந்திருக்கலாம் என கூறியுள்ளனர். இதையடுத்து, சம்பவம் குறித்து அருண்குமார் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
The post கவனம்!!! கிரைண்டரால் பறிபோன உயிர்.. appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
