108 ஆம்புலன்ஸ்ல வேலை வாய்ப்புகள் 2023

அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு சென்னையில் அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏறத்தாழ 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைப் பொறுத்தவரை 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவசரகால கட்டுப்பாட்டு மையத்துக்கு நாளொன்றுக்கு 15,000-க்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன.
இந்நிலையில், அவசரகால மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு திருவள்ளூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
மருத்துவ உதவியாளர் பணியிடங்களில் சேர பிஎஸ்சி நர்சிங் அல்லது டிஜிஎன்எம் அல்லது பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், நுண் உயிரியல், உயிரி வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல் படிப்பில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும்.
இல்லையெனில், ஏஎன்எம், ஜிஎன்எம், டிஎம்எல்டி ஆகிய படிப்புகளை பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பிறகு நிறைவு செய்திருத்தல் அவசியம். 19 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இப்பணியில் சேரலாம். ஓட்டுநர் பணியிடங்களில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் வைத்துள்ள 24 – 35 வயதுக்குட்பட்டவர்கள் இப்பணியில் சேரலாம்.
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அக்.4-ஆம் தேதி காலை 10 மணி முதல், எழுத்துத்தேர்வு, மருத்துவத்தேர்வு, நேர்முகத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று அதில் கலந்துக்கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: 7397444141, 8754435247, 7397724812 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in