அடச்சை ஆண் குழந்தைக்காக, இப்படியெல்லாமா செய்வார்கள்….? பெற்ற மகள்களையே 10 வருடங்களாக, பாலியல் வன்கொடுமை செய்த தந்தை….!

பல மாணவிகளின் வாழ்வை சீரழித்த ஆசிரியர்….! ஐந்தாம் வகுப்பு மாணவியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன், காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை….!

நாடு, விஞ்ஞானம், ராணுவம், பொருளாதாரம் என்று அனைத்து விதத்திலும் படு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் கூட, மூடநம்பிக்கைகள் நிறைந்த மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில், பிகார் மாநிலத்தில் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக, பெற்ற மகள்களையே 10 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த காமக்கொடூரனுக்கு நீதிமன்றம் ஆயுள்  தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பீகார மாநிலத்தைச் சேர்ந்த பினோத்குமார் சிங் என்பவருக்கு திருமணம் ஆகி, மனைவி, இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என அவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த நிலையில், அவர் திடீரென்று தனக்கு மற்றொரு ஆண் குழந்தை வேண்டும் என நினைத்துள்ளார்.

ஆகவே, தனக்கு மற்றொரு ஆண் வாரிசு வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என அந்த பகுதியில் இருந்த ஒரு சாமியாரை சந்தித்து, அவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். பினோத்குமார் சிங்

அதற்கு பதில் அளித்த அந்த சாமியாரோ, உங்களுக்கு இருக்கும் இரண்டு பெண் குழந்தைகளோடு, நீங்கள் உடலுறவு வைத்துக் கொண்டால், உங்களுக்கு நிச்சயமாக மற்றொரு ஆண் வாரிசு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், எப்படி பெற்ற மகளிடமே உடலுறவு வைத்துக் கொள்வது? என்று கூட யோசிக்காமல், சாமியார் சொன்னதை அப்படியே செய்துள்ளார் அந்த நபர்.

அதாவது, சாமியாரை சந்தித்து விட்டு வீட்டிற்கு வந்த பினோத்குமார், தன்னுடைய 2 மகள்களையும், தன்னுடைய ஆசைக்கு இணங்க விட்டால், உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் வெலவெலத்துப் போன அவருடைய மகள்கள் இருவரும், தந்தையின் சொல் படி நடக்க தொடங்கினார்.

அதன்படி கடந்த 10 ஆண்டுகளாக, அந்த இரண்டு பெண் குழந்தைகளையும், பினோத்குமார் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. ஆனால், இந்த பத்து ஆண்டுகளில், அவரிடமிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும், என்று அந்த இரண்டு சிறுமிகளும் பலமுறை முயற்சித்துள்ளனர். ஆனாலும், அவர்களால், அந்த காம கொடூரனிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.

ஆனாலும், தொடர்ந்து தன்னுடைய தந்தையிடம் இருந்து தப்பிக்க அவர்கள் இருவரும் முயற்சி செய்து வந்ததன் பலனாக, சென்ற வருடம் அவர்கள் இருவரும் தங்களுடைய தந்தையிடமிருந்து, தப்பிச் சென்று, காவல் நிலையத்தில், புகார் வழங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் வழங்கிய புகாரின் சாராம்சத்தை கேட்டு அதிர்ந்து போன காவல் துறையினர், உடனடியாக இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர்.

இந்த வழக்கு  போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த தீர்ப்பில் மூடநம்பிக்கைக்காக இரண்டு பெண் பிள்ளைகளின் வாழ்வை சீரழித்த அவர்களுடைய தந்தையான பினோத்குமார், மேலும் அந்த சிறுமிகளோடு உடலுறவு வைத்துக் கொள்ள சொன்ன சாமியார் மற்றும் வினோத்குமாருக்கு உதவியாக இருந்த அவருடைய அத்தை உள்ளிட்ட அனைவருக்கும் தனித்தனியே தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது நீதிமன்றம். அதாவது பினோத்குமாருக்கும், அந்த சாமியாருக்கும் ஆயுள் தண்டனையும், பினோத் குமாருக்கு உதவியாக இருந்த அவருடைய அத்தைக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனையும், விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இதுதொடர்பான வழக்கு பக்சர் மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட பினோத் குமார் சிங் மற்றும் தந்திரி அஜய் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்த கொடூரமான குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பினோத்குமாரின் மனைவி மற்றும் அத்தை ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *