தார்மிக அடிப்படையில் பார்க்கும்போது அதுவே சரியாக இருக்கும். குற்றமற்றவர் என செந்தில் பாலாஜி நிரூபித்த பிறகு கூட அவரை செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் சேர்த்து கொள்ளட்டும். அதற்கெல்லாம் மேலாக ‘செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியல்ல என நீதிமன்றம் தெரிவித்த பிறகும் இலாகா இல்லாத அமைச்சராக தொடரவைப்பது வியப்பாகத்தான் இருக்கிறது” என்கிறார்கள்.


“செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கும் எண்ணம் தி.மு.க-வுக்கு இல்லை” என பேச ஆரம்பித்தார் தி.மு.க-வின் செய்தி தொடர்பாளர் சல்மா. தொடர்ந்து “செந்தில் பாலாஜியை விசாரணை அமைப்புகளை கொண்டு பழிவாங்குகிறது பா.ஜ.க. தி.மு.க-வுக்கு நெருக்கடி தரவே அமைச்சர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். செந்தில் பாலாஜி குற்றம் செய்தார் என எங்காவது நிரூபிக்கப்பட்டிருக்கிறதா… செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு சட்டத்தில் இடமில்லை என தீர்ப்பு வந்திருக்கிறதா… இல்லையே…
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை அமைச்சரவை வைத்திருக்க வேண்டுமா என்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றுதான் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே அதனை முதலமைச்சர் பார்த்துக் கொள்வார், யார் அமைச்சரவையில் இருக்கவேண்டும் என்பதெல்லாம் முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம்” என்கிறார்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com