அமலாக்கத்துறை புதிய பொறுப்பு இயக்குநராக 'ராகுல்

எஸ்.கே. மிஸ்ரா:

அமலாக்கத்துறையின் வலைதளத்தில் குறிப்பிட்ட தரவுகள்படி, “2018-2019 ஆண்டுகள் அமலாக்கத்துறை ’195’ வழக்குகள் மட்டுமே பதிந்திருந்தது. ஆனால், மிஸ்ரா நியமிக்கப்பட்ட 2021-2022 ஆகிய ஆண்டுகளில் ’1,180’ வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 2004-2014 மற்றும் 2014-2022 ஆகிய காலகட்டத்தை ஒப்பிடுகையில் பணமோசடி வழக்குகள் கடைசி 8 ஆண்டுகளில் பல ஆயிரம் வழக்குகள் அதிகமாக பதியப்பட்டுள்ளது”. இதற்கு முக்கியப் பங்காற்றியவர் எஸ்.கே. மிஸ்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி பல முக்கிய விசாரணைகளை மேற்கொண்டவர் தான் எஸ்.கே.மிஸ்ரா. மத்திய அரசுக்கு சாதகமாகப் பணியாற்றிய மிஸ்ராவை மீண்டும் அரசு பொறுப்புக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

குறிப்பாக, அனைத்து விசாரணை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ‘தலைமை விசாரணை அதிகாரி’ (Chief Investigation Officer) என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் மிஸ்ராவை மீண்டும் அமர காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராதா கிருஷ்ணன்ராதா கிருஷ்ணன்

ராதா கிருஷ்ணன்

மீண்டும் எஸ்.கே.மிஸ்ராவுக்குப் பதவி?

இது குறித்து  பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “நாட்டின் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலைக் கண்காணிக்க என்.எஸ்.ஏ (NSA) என தலைமை அமைப்பு இருப்பதுபோல், நிதி சார்ந்த அமைப்புகளான ஐ.டி, அமலாக்கத்துறை ஆகியவற்றைக் கண்காணிக்க ’தலைமை அதிகாரியை’ நியமிக்கவிருப்பதாக தகவல் வந்தது. அதற்கும் மிஸ்ராவை தலைவராக அமர்த்துவார்கள் என சொல்லப்பட்டது. ஆனால், அதற்காக எந்த மசோதாக்கள் கொண்டுவரவில்லை. ஓய்வு பெற்றவர்களை அரசுப் பணியில் நியமிக்கவே கூடாது. மத்திய அரசு எந்த விதிகளுக்கும் கட்டுப்படுவதில்லை. இதைத் தொடர்ந்து செய்வதால், கீழ்மடை வரை பணி  உயர்வு பாதிக்கப்படுகிறது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் அரசாங்கம் கவலைப்படுவதில்லை. அதற்கான சட்டத்தை மட்டும் இயற்றி பார்லிமெண்டில் நிறைவேற்றுகின்றனர். அதனால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் கூட வழக்கு நிற்பதில்லை.

 இதைப் பல துறைகளில் மத்திய அரசு செய்து வருகிறது. அவர்களுக்கு தகுந்தார்போல் செயல்படும் அதிகாரிகளாக இருந்தால் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. எனவே, எஸ்.கே.மிஸ்ராவுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்னுமில்லை” என்றார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *