பா.ஜ.க என்பது தொங்கு சதை, எக்ஸ்ட்ரா லக்கேஜ், அதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுமக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். எனது வாழ்நாளிலேயே பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்காது என ஜெயலலிதாவும் அறிவித்தார். மரண நொடிவரை பா.ஜ.க-வுடன் அவர் கூட்டணி வைக்கவில்லை. இப்போது எடப்பாடி இம்முடிவை காலம்தாழ்த்தி எடுத்தாலும், வரவேற்கதக்கது, பாராட்டுதலுக்குரியது” எனச் சொன்னவர் தி.மு.கவை ஒரு பிடி பிடித்துவிட்டார்.


“பேரறிஞர் அண்ணாவை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசிவிட்டார் என்பதற்காக அதிமுக அப்படியான முடிவை எடுத்துள்ளதே. என் இனத்தை கொன்றது காங்கிரஸ், கச்சத்தீவை தாந்தோன்றி தனமாக கொடுத்ததும் காங்கிரஸ் தான். மீத்தேன், இ-தேன், ஜி.எஸ்,டி, என்.ஐ.ஏ, நீட் நுழைவுத் தேர்வு இவற்றையெல்லாம் கொண்டு வந்தது யார்… காங்கிரஸ். தற்போதுகூட காவிரி நீரை தர மறுக்கிறது காங்கிரஸ். அதற்காகவாவது காங்கிரஸை தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேற்றுவார்களா… இதுபோன்ற துணிச்சலான முடிவுகளை திமுக ஒருபோதும் எடுக்காது.. அதிமுகதான் எடுக்கும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com