`கணவரின் ஆதார் தரவை திருமண உறவின் அடிப்படையில் மட்டுமே ஒரு பெண் ஒருதலைபட்சமாக அணுக முடியாது’ என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் ஆதார் எண், பதிவு விவரங்கள் மற்றும் தொலைபேசி எண் ஆகிய தரவுகளை கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.சுனில் தத் யாதவ் மற்றும் விஜயகுமார் ஏ பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த ஜோடிக்கு நவம்பர் 2005-ல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. உறவில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அப்பெண் சட்டபூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளார்.
குடும்ப நீதிமன்றம் அவருக்கு பராமரிப்புத் தொகையாக 10,000 ரூபாய் மற்றும் அவர்களின் மகளுக்குக் கூடுதலாக 5,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com
