மனைவி டார்ச்சர் தாங்க முடியல!… விவாகரத்து செய்த ஷிகர் தவான்!… டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

மனைவி டார்ச்சர் தாங்க முடியல!… விவாகரத்து செய்த ஷிகர் தவான்!… டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

மனைவி ஆயிஷா முகர்ஜி தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாக ஷிகர் தவான் தொடர்ந்த வழக்கில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜி என்பவரை இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் திருமணம் செய்துள்ளார். ஷிகர் வானை விட 10 ஆண்டுகள் ஆயிஷா மூத்தவர் ஆவார். எனினும் இருவரும் அன்பாக வாழ்ந்த நிலையில் இவர்களுக்கு ஜோராவர் என்ற ஒரு குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, மனைவி ஆயிஷா முகர்ஜி தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாகக் கூறி விவாகரத்து கேட்டு ஷிகர் தவான் டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஷிகர் தவான் பணத்தில் ஆஸ்திரேலியாவில் மூன்று வீடுகளை வாங்கி விட்டு அதனை தமது பெயருக்கு எழுதிக் கொடுக்க ஆயிஷா முகர்ஜி தவானை வற்புறுத்தியதாகவும், மேலும் தமது முன்னாள் கணவருக்கு பிறந்த மகள்களின் கல்வி செலவை ஷிகர் தவான் ஏற்றுக்கொண்டு மாதம் 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் என துன்புறுத்தியதாகவும் ஷிகர் தவான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனைவி மன ரீதியில் துன்புறுத்தியது உறுதியானதையடுத்து, இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஆஸ்திரேலியாவில் தனது மனைவியுடன் இருக்கும் மகன் ஸோராவரை ஷிகர் தவான் சந்திக்கவும், வீடியோ கால் மூலம் பேசவும் அனுமதி வழங்கியுள்ளது. இது தவிர, தவான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தங்குவதற்கு குழந்தையை அனுமதிக்க வேண்டும் என்றும், பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தையை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்றும் அவரது மனைவிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *