இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி-யான டெரிக் ஓ ப்ரையன், “குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு மஹுவா மொய்த்ரா கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். நெறிமுறைகள் குழு விசாரணையின் முடிவுக்காக கட்சி காத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்,
இந்த நிலையில், மஹுவா மொய்த்ராவை அவரின் கட்சி கைவிட்டுவிட்டது என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். மேலும், திரிணாமுல் காங்கிரஸின் தலைமையின் மௌனம், அவரின் கட்சி எம்.பி குற்றம் செய்திருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வதையே உணர்த்துகிறது என்றும் பா.ஜ.க-வினர் கூறுகிறார்கள்.


ஆனால், இந்த விவகாரம் வெடித்தவுடன், என்ன நடந்தது என்ற விவரங்களை முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். இது பற்றி திரிணாமூல் காங்கிரஸார் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று மம்தா பானர்ஜி அறிவுறுத்தியிருக்கிறார். மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இந்த விவகாரம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்ற முடிவை மம்தா பானர்ஜி மேற்கொண்டிருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நெறிமுறைகள் குழு விசாரணையின் முடிவுக்குப் பின்னர் தான் மம்தா இந்த விவகாரத்தில் முடிவெடுப்பார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com