2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோற்ற பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு மாறிவிட்டது. 2022-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, ‘தி.மு.க-வின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகிறது. தி.மு.க ஆட்சிக்கும் அமைச்சர்களுக்கும் ஏவல்துறையாக காவல்துறை மாறிவிட்டது. எனவே, தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில், 2024 -ம் ஆண்டு சட்டமன்றத்துக்குத் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும்’ என்றார்.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில், `நேர்வழியில் தி.மு.க வெற்றிபெற்றதாக சரித்திரம் இல்லை. ஜனநாயக முறைப்படி நடக்கும் தேர்தலில் தில்லுமுல்லு செய்து முறைகேடாக வெற்றி பெற தி.மு.க முயன்றால், அ.தி.மு.க சும்மா இருக்காது. தி.மு.க தொடர்ந்து தவறு செய்தால், தமிழ்நாடு சட்டமன்றத்தை முடக்கும் நிலை ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்போது ஆட்சியதிகாரத்தில் அ.தி.மு.க இருக்கும்’ என்றார்.
`2021-ல் ஆட்சியதிகாரத்தை இழந்து எடப்பாடி பழனிசாமி, எப்படியாவது மீண்டும் முதல்வராகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னம் இரண்டரை ஆண்டு காலம் இருக்கிறது. அதுவரை அவரால் பொறுத்திருக்க முடியவில்லை போலும். எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் வந்துவிட்டால், ஸ்டாலின் அரசு கலைக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும்… அப்போது வெற்றிபெற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடலாம் என்று ஆசைப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?’ என்கிறார்கள் திமுக-வினர்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com