ஆனால் இதுகுறித்து பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசுகையில், “மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நீர்மின் திட்டங்களுக்கான நிபுணர் மதிப்பீட்டுக் குழுவில் உறுப்பினரை நியமிக்க சில விதிமுறைகள் உள்ளன. அவ்விதிமுறைகளை மீறி உறுப்பினர் நியமனம் நடைபெறவில்லை. அதேபோல எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் தாரலி பம்பிங் சேமிப்புத் திட்டம் குறித்த பரிசீலனையின்போது, தான் உள்ளே இல்லை என்று ஜனார்தன் செளத்ரியே தெளிவுபடுத்திவிட்டார். எந்த நிறுவனமாக இருந்தாலும் சட்ட விதிகளை பின்பற்றி ஒப்பந்தத்தை பெறுவதை யாரும் குறை சொல்ல முடியாது. அதானி குழுமம் பெற்றுவிட்டது என்பதற்காகவே இத்தகைய கருத்துக்களை எதிர்க்கட்சிகள் தெரிவிப்பது என்பது அரசியல் செய்ய அவர்களுக்கு இருக்கும் பஞ்சத்தைத்தான் காட்டுகிறது.” என்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com