இப்படியிருக்க, சமீபத்தில் காஸாவிலிருந்து வெளியேறிய டிமா, தெற்கு காஸாவிலுள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டில் இருந்துவந்தார். இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தான் தங்கியிருந்த வீடு வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளானதில், டிமா உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில், இவர் மட்டுமல்லாமல் இவருடைய கணவர், ஆறு மாத ஆண் குழந்தை, இரண்டு சகோதரர்களும் மிக மோசமான முறையில் கொல்லப்பட்டனர். மேலும், அதே வீட்டில் தஞ்சமடைந்திருந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.


இந்தச் சம்பவத்துக்குப் பிறகு டிமா குறித்துப் பேசிய, உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ரிக் பீபர்கார்ன் (Rik Peeperkorn), “அற்புதமான நபர் டிமா. எப்போதும் புன்னகையுடன், மகிழ்ச்சியாகவும், நேர்மறை எண்ணத்துடனும் வலம்வருவார். டிமா ஓர் உண்மையான அணி வீரராகத் திகழ்ந்தார். அவரின் பணி மிகமுக்கியமானது. மேலும், காஸாவிலிருக்கும் துணை அலுவலகம், குழுவுக்கு ஆதரவாக இன்னும் கூடுதலான பொறுப்புகளை ஏற்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். இந்த நிலையில், அவரின் இழப்பு நம் அனைவருக்குமே வேதனையானது. டிமாவின் தாய், தந்தை (காஸாவில் நீண்டகாலமாக சேவையாற்றும் மருத்துவ நிபுணர்), அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைப் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com