'தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு'

இது அநீதிக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிராக நீதி கிடைக்க வேண்டும் என்றால் எவ்வளவு போராட வேண்டும் என்பதை காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் இந்த அமைப்புகள் என்னதான் செய்கிறது?. சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தோம், கைது செய்தோம் என இயற்கையாகவே எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக்கூட அவர்கள் எடுப்பதில்லை. அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீதும் பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த அறிக்கையே நீதி விசாரணைதான். புலன் விசாரணை மேற்கொள்ளவில்லை. அவர்களால் அதை செய்வது மிகவும் கடினம்.

சிபிஐசிபிஐ

சிபிஐ
ட்விட்டர்

அப்படி இருந்தும் அந்த ஆணையம் அதிகாரிகள் பலர் தவறு செய்திருப்பதாக கூறுகிறது. ஆனால் புலன் விசாரணை செய்ய வேண்டிய சி.பி.ஐ கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. பிறகு எதற்கு சி.பி.ஐ இருக்கிறது?. எந்த தவறு செய்தாலும் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என்ற மனப்போக்கில்தான் இருக்கிறார்கள். இதில் சி.பி.ஐ மிகவும் மோசமாக நடந்துகொள்கிறது. நிர்வாகத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதை தட்டி கேட்க மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

வாச்சாத்திவாச்சாத்தி

வாச்சாத்தி

வாச்சாத்தி வன்முறையில் 32 ஆண்டுகள் நாங்கள் கடுமையான போராட்டம் நடத்திய பிறகே தீர்ப்பு வந்திருக்கிறது. இதுபோல் ஒவ்வொரு வழக்குக்கும் 32 ஆண்டுகள் போராட வேண்டும் என்றால், பிறகு எதற்கு இந்த அமைப்புகள் இருக்கின்றன?. தற்போதைய நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு சி.பி.ஐ எப்படி விசாரித்து அறிக்கை சமர்பிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். இருப்பினும் எங்களது சட்ட வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்கள் கூறும் கருத்துப்படி அடுத்தகட்ட முடிவெடுக்கப்படும்” என கொதித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… 

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… 

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *