தமிழ்நாடு அரசியலை பரபரக்க வைத்திருக்கிறது அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி பஞ்சாயத்துகள். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லை எனப் போட்டுடைத்த அ.தி.மு.க தரப்பு தற்போது ஆழ்ந்த மெளனத்துக்கு சென்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. முறிந்தது முறிந்தது தானா… அல்லது முடிவை மாற்றிக் கொள்ளுமா அ.தி.மு.க?… என்னாவாகும் அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணியென விசாரித்தோம்.
1956 -ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடியதாகவும் மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததாகவும், அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர் எனக் கூறி நெருப்பை பற்ற வைத்தார் அண்ணாமலை.
இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது என வரலாற்று ஆசிரியர்களும், அச்சு ஊடகங்களும் சான்றுடன் தெளிவுபடுத்தின. அண்ணா குறித்து அவதூறு கருத்துகளை பரபரப்புவதா… எனக் கொதித்து எழுந்தது அ.தி.மு.க. அண்ணாமலைக்கு பேச்சுக்கு செல்லூர் ராஜூ, சி.வி சண்முகம் போன்ற முன்னாள் அமைச்சர்கள் கடுமையான ஸ்டேட்மென்டுகளை உதிர்த்தனர். பதிலுக்கு அண்ணாமலையும் தன் பங்குக்கு அ.தி.மு.க-வினர் மீது பாய்ந்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com