
ஜோ பைடன்: “இஸ்ரேலுக்கு அமெரிக்கா எப்போதும் திடமான ஆதரவு அளிக்கும். அவர்களுக்கு உதவி செய்வதில் ஒரு போதும் பின் வாங்கமாட்டோம். கப்பல்கள், விமானங்கள் மற்றும் கூடுதல் ஆயுதங்களை உதவிக்கு அனுப்புவோம்!”
அயதுல்லா அலி (ஈரான்): “பாலஸ்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை பெறும் வரை அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். பாலஸ்தீனர்களின் உரிமைக்காக நாங்கள் எப்பொழுதும் உடன் இருப்போம்.”

சவுதி அரேபிய வெளியுறவுத் துறை: “இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் இந்த வன்முறை, மேலும் வளராமல் உடனடியாக நிறுத்த வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் கவனிக்கப்பட வேண்டியது.”

ரஷ்ய வெளியுறவுத் துறை: “இஸ்ரேலும் பாலஸ்தீனமும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், வன்முறையைத் தவிர்க்க வேண்டும். சர்வதேச நாடுகளின் உதவியுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கும் சமாதானத்தை நிறுவ கேட்டுக்கொள்கிறோம்.”

ரிஷி சுனக் (பிரிட்டன்)- “தன்னை தற்காத்துக் கொள்வதற்கு இஸ்ரேலுக்கு முழு உரிமை இருக்கிறது. எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்யத் தயாராக உள்ளோம்.”

வோலோடிமர் ஜெலன்ஸ்கி (உக்ரைன்)- “பயங்கரவாதம் ஒரு மிகப்பெரிய குற்றம். இது ஒரு நாட்டுக்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கோ மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் அது எதிரானதாகும்.”

யோகோ காமிகாவா (ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர்): “காஸா பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் நிலை குறித்து நாங்கள் வருந்துகிறோம். அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து மேலும் தாக்குதல்களையும் சேதங்களையும் தடுப்பதற்காக அழைப்பு விடுக்கிறோம்.”

நரேந்திர மோடி (இந்தியா): “இஸ்ரேல் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடினமான நேரத்தில் இந்தியா இஸ்ரேலுக்குத் துணை நிற்கும், ஒற்றுமையாக இருக்கும்.”

ஐக்கிய நாடுகள் சபை: “இந்த வன்முறையை உடனடியாக நிறுத்தும்படி நான் கேட்டுக்கொள்கிறொம். மேலும் பிற முக்கிய நாடுகளும் இதைத் தடுப்பதற்கு உதவும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.”

ஐரோப்பிய ஒன்றியம்: “இது பயங்கரவாதத்தின் மிகக் கொடூரமான ஒரு தாக்குதல் ஆகும். இத்தகைய தாக்குதலிலிருந்து இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியம்.”
நன்றி
Publisher: www.vikatan.com