ஆனால், இந்த அறிவிப்புகளை ஏற்க மறுத்த ஆசிரியர்கள் உள்ளபடியே தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்த நிலையில் போராட்டத்தின் 8-ம் நாளான நேற்று முந்தினம் அதிகாலை போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தது தமிழக காவல்துறை. அவர்கள் மயிலாப்பூர், புதுப்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். இருந்தபோதிலும், அங்கிருந்தபடியே உணவு உண்ணாமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர் ஆசிரியர்கள் சங்கத்தினர்.


ஆசிரியர்களின் கைதுக்கு பல்வேறு எதிர்கட்சியினர் கண்டம் தெரிவித்தனர். குறிப்பாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181 ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாள்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர், அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும், வன்மையாக கண்டிக்கிறேன்!” என கண்டனம் தெரிவித்தார்.
அதேபோல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.


அந்த நிலையில், திடீர் திருப்பமாக நேற்று மாலை பகுதிநேர ஆசிரியர் சங்கத்தினரும், டெட் தேர்வு தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களும் அரசின் அறிவிப்பை ஏற்று தங்களின் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தனர். ஆனால், இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் மட்டும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கின்றனர். மேலும், “போராட்டத்தை வாபஸ் பெறக்கூறி எங்களை யாரும் மிரட்டவில்லை. எங்களின் கோரிக்கைகளை 3 மாதத்தில் அரசு நிறைவேற்றுவதாக உறுதியளித்திருப்பதாலும், மாணவர்களின் நலன் கருதியும் எங்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் வாங்கியிருக்கிறோம்!” எனத் தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினரும் டிபிஐ வளாகத்தை விட்டு வெளியேறி குடும்பத்துடன் தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றிருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com