அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு, “‘மசூதி கட்டப்பட்டதே ஒரு கோயிலை இடித்துத்தான் என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது” என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசனும் கருத்துச் சொல்லியிருந்தார். அதோடு, உதயநிதியின் கருத்துக்கு பாஜக-வினர் கடுமையான எதிர்வினை ஆற்றிவருகிறார்கள்.
இந்த சூழலில், இது குறித்து திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம், “இதுகுறித்து அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை முன்னெடுக்கும் முற்போக்கு சிந்தனையுடைய ஒரு இயக்கத்தின் அமைச்சர் பேசாமல் வேறு யார் பேசுவார்கள். அமைச்சர் உதயநிதி சொன்ன கருத்தை மதத்தை ஆன்மிகமாக, வழிபாடாக, தங்கள் வாழ்க்கை முறையாக கடைப்பிடிக்கும் அனைவரும் ஒத்துப்போவார்கள்.


ஒரு ஆன்மிக இடத்தை இடித்துவிட்டு அதில் இன்னொரு கடவுளுக்கு ஆலயம் அமைப்பதை எந்த ஆன்மிகவாதியும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அது எந்த மதமாக இருந்தாலும் பொருந்தும். அயோத்தியில் மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்டுவோம் என்று சொன்னவர்கள், இன்று அங்கிருந்து தள்ளி ஆலயத்தை அமைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இவர்களின் நோக்கம் ஆன்மிகம் கிடையாது. கடவுளின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் புறம்போக்கு வாதிகள். அவர்களுக்கு ஜனநாயகத்தைக் காக்கும் எந்த ஒரு தத்துவமும் பேசத் தெரியாது. கடவுளின் பெயரைச் சொல்லி சண்டை போடத் தெரியும். அதனை வைத்து வாக்கு அரசியல் செய்யத் தெரியும். அந்த பேச்சிலேயே அவர்களின் பிற்போக்குத்தனம் வெளிப்படுகிறது. இன்றைய பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது 150-க்கும் மேற்பட்ட கோயில்களை இடித்து தரைமட்டமாகியவர் என்பதை பாஜகவினரால் மறுக்க முடியுமா. சாத்தன் வேதம் ஓதக்கூடாது” என்று பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com