இதற்கிடையே ரயில் பயணிகளை மீட்கும் பணி குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலம் கேட்டறிந்தார்.” என்றார்.
மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் தங்களுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தங்கள் ஊரில் நிறுத்தப்பட்ட ரயிலில் உள்ள பயணிகளுக்கு உதவ வேண்டுமென்று நினைத்த மக்கள், மழையால் தாங்கள் சிரமத்துக்கு ஆளான நிலையிலும் ரயில் நிலையம் அருகிலுள்ள கோயில் அருகே 18-ஆம் தேதி காலை முதல்,19 -ஆம் தேதி மாலை வரை மூன்று வேளையும் உணவு சமைத்து ரயிலுள்ள பயணிகளுக்கும், அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த பயணிகளுக்கும் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதுபோல் தங்கள் வீட்டு மாடுகளிலிருந்து பால் கறந்து கொண்டு வந்து ரயிலில் இருந்த குழந்தைகளுக்கும் தேவையான பயணிகளுக்கும் கேட்டு கேட்டு கொடுத்துள்ளனர்.
மிகப்பெரிய மீட்புப்பணிதான்.. மத்திய மாநில பேரிடர் மேலாண்மைக்குழு வீரர்கள், ரயில்வே மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் குறிப்பாக அப்பகுதி பொதுமக்களுக்கு நன்றியை செலுத்துவோம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
