ராஜாஜி பற்ற வைத்த தீ!
இப்படி தான் திட்டமிட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. கலை நிகழ்ச்சிகள் எல்லாம் தமுக்கம் கலையரங்கத்திலும், சொற்பொழிவுகள் எல்லாம் மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு ஆடி வீதியில் நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ராஜாஜி, ‘சிவபெருமானை தென்னாட்டு கடவுள் என்று அழைக்கும் சம்பிரதாயம் இருக்கு. அதுக்கு ஸ்லோகம் இருக்கு, தென்னாடுடயே சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற சம்பிரதாயம் இருக்கு. சிவபெருமானே தமிழ் சங்கத்தின் தலைவராக இருந்து தமிழ் சங்கத்தை நடத்தினார் என்கிற புராண வரலாறு இருக்கிறது. இன்று காலத்தில் ஆரியம், திராவிடம் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கலப்பில்லாத ஆரியன் இருந்தான், கலப்பில்லாத திராவிடன் இருந்தான், இன்று ஆரியன் யார்? திராவிடன் யார்? என்று பிரித்து சொல்ல முடியாத அளவிற்கு சமுதாய பழக்கங்கள் ஒருங்கிணைந்து போய்விட்டது. இந்த காலத்தில் திராவிட நாடு என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த காலத்தில் இது அவசியம் இல்ல. ஜனங்கள் ஒற்றுமையாக இருக்கும் நேரத்தில், நாடு ஒற்றுமையா இருக்கும் நேரத்தில் இதை பேசுவது அவசியம் இல்லை. தனி மனிதனா காலடியில் பிறந்து, ஆன்மிக நடைபயணமா இமயம் வரை ஒருங்கிணைத்தவர் ஆதிசங்கர் என்று இருக்கிறது. அந்த காலகட்டத்தில் அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு, திண்ணையில் இருந்து கொண்டே திராவிட நாடு கேட்போம் என்று தேர்தல் அரசியல் பேச அப்போது அவர்கள் வரவில்லை. தனித்திராவிட நாடு என்கிற கோரிக்கையை அதிகம் வைக்கிறார்கள். அது கூடாது என்று பேசினார் ராஜாஜி.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com