`குட்டைப் பாவாடை அணிவது ஆபாசமானது அல்ல' – வழக்கை ரத்து

மும்பை, புறநகர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கடந்த மே மாதம் நடந்த பார்ட்டியில் பெண்கள் “குட்டை பாவாடை அணிந்து கொண்டு ஆபாசமாக நடனம் ஆடுவதாக’ போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு சென்று ரெய்டு நடத்திய போது பெண்கள் குட்டையான பாவாடை அணிந்து கொண்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்களது நடனத்தை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவர்கள் மீது போலி ரூபாய் நோட்டுகளை வீசிக்கொண்டிருந்தனர். இது தொடர்பாக பெண்கள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது ஆபாச செயலில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விஜய் மற்றும் வால்மீகி ஆகியோர் அடங்கிய அமர்வு, ’தனிப்பட்ட போலீஸ் அதிகாரியின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரர்களின் செயலை ஆபாசம் என்று தனிப்பட்ட முறையில் போலீஸ் அதிகாரி கருத்துத் தெரிவித்துள்ளார். எந்த செயல்கள் ஆபாசம் என்று நிர்ணயிப்பதில் அவரின் குறுகிய கண்ணோட்டத்தை இது காட்டுகிறது. இது பிற்போக்கான செயலாகும். இவ்விவகாரத்தில் முற்போக்கான நிலைப்பாட்டை எடுக்க விரும்புகிறோம்.

இது போன்ற முடிவை எடுக்க போலீஸ் அதிகாரிகளை அனுமதிக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் குட்டை பாவாடை அணிந்து, போலீஸார் ஆபாசமாக கருதும் வகையில் சைகைகள் செய்ததை ஆபாச செயல்கள் என்று கருதமுடியாது. தற்போது இது போன்ற ஆடைகளை அணிவது பொதுவானதாகிவிட்டது. இது போன்ற ஆடைகள் அல்லது நீச்சல் உடைகள், வெளிப்படையான ஆடைகளை அணிவதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது போன்ற ஆடைகளை திரைப்படங்கள், அழகிப்போட்டிகளில் காணமுடிகிறது” என்று தெரிவித்த நீதிபதிகள் இதற்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *