போரை நாங்கள் தான் முடிப்போம்! எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்! முடிவுக்கு வருமா?

Today News 2023
போரை நாங்கள் தான் முடிப்போம்! எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்! முடிவுக்கு வருமா? 2

கடந்த சனிக்கிழமை அன்று பாலஸ்தீனம் – இஸ்ரேல் எல்லையில் உள்ள காஸா பகுதியில் தனது தாக்குதலை ஹமாஸ் ஆயுதக் குழுவினர் தொடங்கினர். எதிர்பார்க்காத தாக்குதல்களால் இஸ்ரேலிலின் பல பகுதிகள் சேதம் அடைந்தது. இதற்கு பதில் கூறும் வகையில் இஸ்ரேலிய ராணுவம் தனது தாக்குதலை ஆரம்பித்து உள்ளது. இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தாக்குதலில் இதுவரை 1,200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இதனை பற்றி பேசிய இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு ஹமாஸ் குழுவினர் பொதுமக்கள், குழந்தைகள் மீதும் தங்கள் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் ஹமாஸ் குழுவுவை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது ஒட்டுமொத்த உலகின் வெற்றி என்றும், ஹமாஸ் குழுவினர் போரை ஆரம்பித்து இருந்தாலும் முடிவுக்கு கொண்டு வருவது இஸ்ரேலிய ராணுவம் தான் என்றும் அறிவித்து உள்ளார்.

Also Read >> CTET தேர்வர்களே… இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு! என்னானு உடனே பாருங்க…!

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காஸா மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் பணயக் கைதிகளை கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்து உள்ளனர். மேலும் இஸ்ரேல் பிரதமர் விஸ்வரூபம் படத்தில் வரும் வசனத்தின் பாணியில் “போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை போர்தாம் எம்மை தேர்ந்தெடுத்துக்கொண்டது” என்று கூறி உள்ளார்.

இந்த போரை இஸ்ரேலிய ராணுவம் விரும்பவில்லை என்றும், அந்த சூழலுக்கு தங்களை கட்டாய படுத்தியதாகயும் கூறி உள்ளார். அதோடு தங்களுக்கு ஆதரவு தர முன்வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நன்றியை தெரிவித்து உள்ளார். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவுக்கு ஈடானது ஹமாஸ் ஆயுதக்குழு என்றும், அவர்களை அழித்து விடுவோம் என்றும் அறிவித்து உள்ளார்.

இதை தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக சவுதி அரேபியாயும் ஆதரவு கரத்தை நீட்டி உள்ளது. மேலும் பாலஸ்தீனிய மக்கள் தங்களின் உரிமைக்ககாக போராடி வருகின்றனர் என்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்து உள்ளார். இதற்கு இடையில் மத்தியில் சர்வதேச சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இஸ்ரேலில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களில் சிலர் அமெரிக்காவை சேர்த்தவர் என்றும் கூறப்படுகிறது.

எனினும், போரால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலிய மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துணை நிற்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். கடந்த சனிக்கிழமை தொடங்கிய போர் நான்கு நாட்கள் ஆனா நிலையில் இரு தரப்பினருக்கும் சண்டை ஓயவில்லை என்று அங்குள்ள பன்னாட்டு பத்திரிகையாளர்கள் கூறி வருகின்றனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *