மேலும், `தீவிரவாத செயல்களை எந்த நியாயப்படுத்துதலுக்கும் உலகம் விலைபோகக் கூடாது. அதேசமயம், பாலஸ்தீனத்தில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும்’ என, இந்தியா கருத்தும் தெரிவித்தது. இருப்பினும், பாதிக்கப்படும் பாலஸ்தீனத்துக்கு இந்தியா ஆதரவாக நிற்காமல் வாக்கெடுப்பை புறக்கணித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக மத்திய பா.ஜ.க அரசை, காங்கிரஸ் சாடியது. இதற்கு, பா.ஜ.க தரப்பிலிருந்தும் பல்வேறு பதில் விமர்சனங்கள் வந்தன. இந்த நிலையில், தீவிரவாதத்தின்மீது வலுவான நிலைப்பாட்டை எடுப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

போபாலில் நேற்று பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இன்று, ஒரு நல்ல அரசு மற்றும் வலுவான ஆட்சி அதன் மக்களுக்காக நிற்கிறது. இங்கு உள்நாட்டில் எப்படி நல்லாட்சி தேவையோ, அதேபோல வெளிநாடுகள்மீது சரியான நிலைப்பாடுகள் எடுப்பதும் அவசியம். எனவேதான், தீவிரவாதத்தின்மீது நாங்கள் வலுவான நிலைப்பாட்டை எடுக்கிறோம். ஏனென்றால், தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். தீவிரவாதம் நம்மை தாக்கும்போது அது தீவிரமானது என்றும், மற்றவர்களைத் தாக்கும்போது அது தீவிரமானது இல்லை என்றும் கூறினால், அது நம்மீது நம்பகத்தன்மையை இல்லாமல் ஆக்கிவிடும். எனவே, நாம் ஒரு நிலையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
