இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை, காவிரி நீர் தராத காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என திமுக அறிவித்துவிட்டால், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது என சீமான் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இஸ்லாமிய சிறை கைதிகளை திமுக அரசு விடுதலை செய்து காண்பிக்கட்டும். அவர்களை விடுதலை செய்துவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது.
அதேபோல், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர கர்நாடகா காங்கிரஸ் அரசு மறுக்கிறது. அப்படியான காங்கிரஸ் கட்சியுடன் தேர்தலில் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு காங்கிரஸை திமுக கழற்றிவிடட்டும். இதனை திமுக செய்துவிட்டால் நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது.
அதேபோல ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. அப்படி அவர் போட்டியிடும் நிலை உருவானால், திமுக எதிர்த்து போட்டியிட்டு வேட்பாளரை நிறுத்தட்டும். ராமநாதபுரத்தில் திமுக வேட்பாளர், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சி திமுக-வை ஆதரிக்கும். இதை திமுக செய்ய தயாரா?” என்று பேசினார்.
நன்றி
Publisher: 1newsnation.com