இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தியதையடுத்து, கடந்த நான்கு வாரங்களாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது இஸ்ரேல். இந்தப் போரில், ஹமாஸ் தாக்குதலில் 1,400 இஸ்ரேலிகள் உயிரிழந்திருக்கின்றனர். அதேசமயம், இஸ்ரேல் நடத்தும் பதிலடி தாக்குதலில் இதுவரை 3,760 சிறுவர்கள், 2,326 பெண்கள் உட்பட மொத்தமாக 9,061 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும், சுமார் 32,000 பாலஸ்தீனியர்கள் காயமடைந்திருக்கின்றனர். இந்தக் தாக்குதல்கள் இன்னமும் நீண்டுகொண்டே தான் இருக்கின்றன.


இருப்பினும், இஸ்ரேலின் இத்தகைய தாக்குதலை கண்டிக்காமல், தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம் என அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் மௌனம் காத்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி நடந்தது தீவிரவாத தாக்குதல்தான் என மீண்டும் ஒருமுறை சொல்லியிருக்கும் இந்தியா, தீவிரவாதத்துக்கு எதிர்க்க நாம் நிற்கவேண்டும் என்றும், அதில்தான் பாலஸ்தீன பிரச்னையும் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com