இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகமாக மல்லிகார்ஜுன கார்கே இருந்தால் மகிழ்ச்சி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த மம்தா பானர்ஜி, “இந்தியா கூட்டணியின் முகம் யார் என்று எல்லோரும் எங்களிடம் கேட்கிறார்கள். கூட்டத்தில், கார்கேவின் பெயரை நான் முன்மொழிந்தேன்.




அதேபோல், ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா, “கார்கே நம் நாட்டின் உயர்ந்த தலைவர். ஐந்து தலைமுறை அரசியல் வாழ்வை அவர் கொண்டிருக்கிறார். அரசியல்வாதி மட்டுமல்லாது அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியும்கூட” என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், கார்கேவின் பெயரை மம்தா பானர்ஜி முன்மொழிந்ததாகவும், ஆனால், முதலில் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டு அதற்குப் பின்னர் அதனை முடிவுசெய்யலாம் என்று கார்கே அதை நிராகரித்ததாகவும், கூட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com