இந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான கனடாவின் நிரந்தர தூதுக்குழுவின் செய்தியாளர் சந்திப்பின் போது, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,”நான் நாடாளுமன்றத்தில் கூறியது போல, கனேடிய மண்ணில் கனேடியர் ஒருவரின் கொலையில் இந்திய அரசின் முகவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நம்புவதற்கு, நம்பகமான காரணங்கள் உள்ளன. சர்வதேச விதிகள் அடிப்படையில், ஒழுங்கைக் கடைபிடிக்கும் கனடாவைப் பொருத்தவரை, இந்த விவகாரம் மிகவும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறோம்.


எங்களிடம் நேர்மையான, சுதந்திரமான நீதிபதிகள் மற்றும் வலுவான செயல்முறை திட்டங்கள் இருக்கின்றன. எனவே, இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறும், இந்த விஷயத்தில் முழு வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்குமாறும், நீதியை உறுதிப்படுத்தவும் எங்களுடன் இணைந்து செயலாற்றுமாறும் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம். கனேடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, எங்களின் மதிப்பையும், சட்டத்தையும் காப்பாற்ற தேவையான பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம். அதில்தான் இப்போது எங்கள் கவனம் இருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com