ஆனால் அண்ணன் வி.பி.ராஜன், ஒரு மேடையில் பேசும்போது, `எனக்கென்று இறுதியாக ஒரேயொரு ஆசை உள்ளது. எங்க ஐயா இன்பநிதியையும் முதல்வராக்கி அழகு பார்த்தால் தான் என் ஆன்மா திருப்தி அடையும்’ என்று கருணாநிதியின் குடும்பத்திற்கு தனது ஒட்டுமொத்த விசுவாசத்தையும் ஒரு படி மேலாகக் காட்டியவர். அந்த வாயில்லா ஜீவனைத்தான் வாட்டி வதைத்திருக்கிறார் பொன்முடி.


மாநில அளவில் ஓரளவுக்கு வி.பி.ராஜனுக்கு இருந்த மரியாதையை பொன்முடி கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறார். பொன்முடியைப் போன்றவர்களால் தான் தமிழக முதல்வரின் தூக்கம் கெடுகிறது. ஒரு மூத்த தலைவரை அவமானப்படுத்திய பொன்முடி போன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தமிழக முதல்வர் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இதை தமிழக முதல்வர் நிறைவேற்றுவாரா?” என அவர் தனது பதிவில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து பேசும் திமுக-வினரோ, “அமைச்சர் காலில் காயமடைந்து இருந்ததால் கட்டுப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். அதை வி.பி ராஜன் பார்த்து விசாரித்தபோது எடுக்கப்பட்ட படம் தான் வெளியே சுற்றுகிறது. உண்மையை தெரிந்து கொள்ளாமல் சிலர் வெளியே பேசுகிறார்கள்” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com